அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.30 அடியாக உயர்வு

வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.30 அடியாக உயர்ந்தது
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 48.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் அணைக்கு 58 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 27.30 அடியாக இருந்தது. ஆனால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. கடந்த 2 நாட்களில் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.50 அடி உயர்ந்துள்ளது. பர்கூர் மலைப்பகுதியில் தொடர்ந்து இதேபோல் மழை பெய்தால் அணையின் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





