திருவள்ளூர் மாவட்ட சட்ட ஆலோசனை அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


திருவள்ளூர் மாவட்ட சட்ட ஆலோசனை அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
x

திருவள்ளூர் மாவட்ட சட்ட ஆலோசனை அலுவலக பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வக்கீல்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் அமைக்கப்பட்ட சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகத்தில் உள்ள பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த வக்கீல்கள் துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர், முழு நேர பணியிடங்களுக்கு இரண்டு வருடம் ஒப்பந்த அடிப்படையில் வக்கீல்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பணியிடங்கள் தகுதிகள், விண்ணப்ப படிவம் மற்றும் இதர தகவல்களை https://districts.ecourts.gov.in/tiruvallur என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்சொன்ன பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற ஜூன் 12-ந் தேதி மாலை 5 மணிக்குள் தலைவர், திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருவள்ளூர். என்ற முகவரிக்கு பதிவு தபாலிலோ அல்லது அலுவலகத்தில் நேரிலோ அளிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான செல்வசுந்தரி தெரிவித்துள்ளார்.


Next Story