சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x

சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மகளிர் நலனுக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகருக்கு 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

விருது பெற விரும்பும் சமூக சேவகர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவராகவும், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை , மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருத்தல் வேண்டும். சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரியும் நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

இந்த விருதை பெறுவதற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் நலனுக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தகுதியான சமூக சேவை நிறுவனம் மற்றும் சமூக சேவை புரிந்து வரும் சமூக சேவகர்களாக இருத்தல் வேண்டும். https://awards.tn.gov.in என்கிற தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் விண்ணப்பித்து அதன் நகலுடன் செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொட ர்பு கொண்டு விருதுக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்ய வே்ண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் சமூக சேவகர் இருப்பிடத்தின் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து பெற்ற குற்றவியல் நடவடிக்கை என்பதற்கான சான்று மற்றும் சேவை பற்றிய ஆவணங்களை புகைப்படத்துடன், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தை

இந்த மாதம் 30-ந்தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நலஅலுவலகம், குறுவள மையகட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகம், 85 ஆலப்பாக்கம், செங்கல்பட்டு - 603 003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story