'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' பெற விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்


சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
x

‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

தந்தை பெரியார் விருது

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்கும் விதமாக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளர் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2023-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள்

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

2023-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதை பெற விரும்புவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலகத்தில் தங்களது விண்ணப்பத்தினை 15-09-2023 தேதிக்குள் அனுப்பி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story