பட்டாசு சில்லரை விற்பனைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்


பட்டாசு சில்லரை விற்பனைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
x

தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு சில்லரை விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற வருகிற 30-ந் தேதிக்குள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை

தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு சில்லரை விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற வருகிற 30-ந் தேதிக்குள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்காலி உரிமம்

தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு சில்லரை விற்பனை தற்காலிக உரிமம் பெற விண்ணப்பதாரர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பிக்கும் போது கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, சுற்றப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்திற்கான நீல வரைபடம் 6 நகல்கள், கடை வைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ள சொந்தக் கட்டிடமாக இருப்பின் அதற்கான உரிய ஆவணம்,

வாடகை கட்டிடமாக இருப்பின் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப்பத்திரம், தற்காலிக உரிமத்திற்கான கட்டணம் ரூ.600 ஸ்டேட் வங்கி மூலம் அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான்,

இருப்பிடத்திற்கான ஆதாரம், தற்காலிக பட்டாசு சில்லரை விற்பனை உரிமம் கோரும் கட்டிடத்திற்கான சொத்து வரி ரசீது, விண்ணப்பத்தாரர் புகைப்படம் 2 ஆகியவை இணைக்க வேண்டும்.

உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர் பட்டாசு கடை நடத்தும் இடத்தை பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமலும், பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு

ஏற்கனவே கடந்த ஆண்டு உரிமம் பெற்ற நபர்கள் அதே இடத்தில் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பம் அளித்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட உரிமத்தையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பத்தாரர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

குறிப்பிட்ட தேதிக்கு மேல் ஆன்லைனில் இ- சேவை மையங்கள் மூலமாகவும் மற்றும் அஞ்சல், நேரடியாகவோ உரிமம் கோரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேலும் நிரந்தர பட்டாசு சில்லரை விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழி முறை பொருந்தாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story