தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 250 பேர்களுக்கு பணி நியமன ஆணை


தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 250 பேர்களுக்கு பணி நியமன ஆணை
x

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 250 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 250 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்,

இதில் செய்யப்பட்ட 250 பேருக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் வளர்மதி, ஏ.எம். முனிரத்தினம் ஆகியோர் பணி ஆணைகளை வழங்கினர். மேலும் மகளிர் குழுவிற்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் கடனுதவிக்கான காசோலைகளையும் அவர்கள் வழங்கினர்.

இதில் சோளிங்கர் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன், ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச் சேர்மன் நாகராஜ் மற்றும் தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story