வேலைவாய்ப்பு முகாமில் 48 பேருக்கு பணி நியமன ஆணை


வேலைவாய்ப்பு முகாமில் 48 பேருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 22 April 2023 6:45 PM GMT (Updated: 22 April 2023 6:46 PM GMT)

விழுப்புரத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 48 பேருக்கு பணி நியமன ஆணை

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 27 தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பணி நாடுனர்களை தேர்வு செய்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 221 பணிநாடுனர்கள் கலந்துகொண்டனர். இம்முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குனர் பாலமுருகன் பார்வையிட்டு தேர்வு செய்யப்பட்ட 48 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.


Next Story