சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு


சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு
x

சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை ஒன்றியம் சீவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகா. குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவியான இவர் 10-ம் வகுப்பு தேர்வில் 492 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளார். அவரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சென்று பாராட்டி சால்வை அணிவித்து ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிதுரை, எஸ்.எம்.ரஹீம், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஷமீம் இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story