திரவுபதி அம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு காட்சி


திரவுபதி அம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு காட்சி
x

சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு காட்சி நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு 6-ம் திருநாள் அன்று சிவகிரி வனச்சரகர் அலுவலகம் சார்பில் அர்ச்சுனன் தபசு காட்சி நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் இரவில் கோவில் முன்பாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் திடல் அருகே வைத்து அர்ச்சுனன் தபசு காட்சி (வனத்தில் தவம் இருக்கும்) காட்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கிருஷ்ணர், பாஞ்சாலி, அர்ச்சுனன் தவம் இருப்பது போன்று சுவாமிகள் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிகள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.


Next Story