சென்னை திரு.வி.க.நகரில் மேயர் தலைமையில் ஏரியா சபா கூட்டம்


சென்னை திரு.வி.க.நகரில் மேயர் தலைமையில் ஏரியா சபா கூட்டம்
x

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் நேற்று ஏரியா சபா கூட்டம் நடந்தது. ஒவ்வொரு வார்டிலும் 10 இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

சென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் நேற்று ஏரியா சபா கூட்டம் நடந்தது. ஒவ்வொரு வார்டிலும் 10 இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில், திரு.வி.க.நகர் மண்டலம் வார்டு 74-க்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஏரியா சபை கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்துகொண்டார். அப்போது, கண்காணிப்பு கேமரா, விளையாட்டு திடல், மின்விளக்கு, குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில், மண்டல அதிகாரி முருகன், ஏரியா சபா செயலாளர் பால்ராஜ் மற்றும் குடிநீர் வாரியம், மின்சாரம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story