வினாத்தாள் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


வினாத்தாள் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்


பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத்தேர்வு 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரையும் நடக்கிறது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 35 ஆயிரத்து 541 பேரும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 34 ஆயிரத்து 259 பேரும், எஸ்.எஸ். எல்.சி. பொதுத்தேர்வை 41 ஆயிரத்து 526 பேரும் எழுத உள்ளனர்.

இதற்காக கோவை மாவட்டத்தில் 254 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான வினாத் தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டன.

அவை கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட் டன.இந்த வினாத்தாள்கள் கோவை மாவட்டத்தில் 12 கட்டுக்கோப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இதில், கோவை டவுன்ஹாலில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

துப்பாக்கி ஏந்திய போலீசார்

மேலும் அந்த அறைக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாது காப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன.

இது போல் கோவை மாவட்டத்தில் மற்ற 11 வினாத்தாள் மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

1 More update

Next Story