2-வது நாளாக பறந்த ராணுவ ஹெலிகாப்டர்


2-வது நாளாக பறந்த ராணுவ ஹெலிகாப்டர்
x
தினத்தந்தி 26 July 2023 7:45 PM GMT (Updated: 26 July 2023 7:46 PM GMT)

பழனியில் 2-வது நாளாக ராணுவ ஹெலிகாப்டர் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக ராணுவ விமானம், ஹெலிகாப்டர் போன்றவை தாழ்வாக பறந்து வருகிறது. நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பழனி பஸ்நிலையம் மற்றும் நகர் பகுதியில் 2 முறை தாழ்வாக பறந்தபடி வானில் வட்டமடித்து சென்றது.

இந்நிலையில் 2-வது நாளாக நேற்றும் பழனி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் வட்டமடித்து பறந்தது. பழனியில் தொடர்ந்து 2 நாட்களாக ராணுவ ஹெலிகாப்டர் பறந்து சென்றதால் பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கோவை மாவட்டம் சூலூர் ராணுவ விமான பயிற்சி பள்ளியிலிருந்து ஹெலிகாப்டர் வந்து செல்கிறது என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினர்.


Related Tags :
Next Story