நாடுகாணி தாவரவியல் பூங்காவை பள்ளி மாணவர்கள் சுற்றி பார்க்க ஏற்பாடு


நாடுகாணி தாவரவியல் பூங்காவை பள்ளி மாணவர்கள் சுற்றி பார்க்க ஏற்பாடு
x
தினத்தந்தி 9 Oct 2023 7:45 PM GMT (Updated: 9 Oct 2023 7:46 PM GMT)

நாடுகாணி தாவரவியல் பூங்காவை பள்ளி மாணவர்கள் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நீலகிரி


கூடலூர் தாலுகா நாடுகாணி வனச்சரகம் சார்பில், வன உயிரின பாதுகாப்பு வார விழாவை ஒட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது. கூடலூர் வன கோட்ட உதவி வன பாதுகாவலர் கருப்பையா, பந்தலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், பேராசிரியர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் நாடுகாணி ஜூன்பூல் தாவரவியல் பூங்காவை மாணவர்கள் சுற்றி பார்த்தனர். மேலும் வனவிலங்குகளின் உடல் பாகங்கள் மற்றும் மீன்களின் காட்சியகத்தை மாணவர்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் வனச்சரகர் வீரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story