தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது

சேலத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
சேலம் சின்னகொல்லப்பட்டியை சேர்ந்தவர் ஹரி (வயது 28). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் அழகாபுரம் சோனா நகர் பகுதிக்கு சென்றார். அப்போது மர்ம நபர் அவரை வழிமறித்து மிரட்டி ரூ.1,500 பறித்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார். இது குறித்து ஹரி அழகாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (21) என்பவரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





