சேலம் புதிய பஸ் நிலைய சைக்கிள் ஸ்டேண்டில்இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது


சேலம் புதிய பஸ் நிலைய சைக்கிள் ஸ்டேண்டில்இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது
x

சேலம் புதிய பஸ் நிலைய சைக்கிள் ஸ்டேண்டில் இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சேலம்

சேலம் புதிய பஸ் நிலையத்தில் சைக்கிள் ஸ்டேண்ட் நடத்தி வருபவர் இளங்கோவன் (வயது 65). இவர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் சைக்கிள் ஸ்டேண்டில் வேலை பார்த்து நின்ற காடையாம்பட்டியை சேர்ந்த திருப்பதி (43) என்பவர் 4 இருசக்கர வாகனங்களை திருடி சென்று விட்டதாக கூறி இருந்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து திருப்பதியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 More update

Related Tags :
Next Story