கணவரை தாக்கிய பெண் உள்பட 2 பேர் கைது


கணவரை தாக்கிய பெண் உள்பட 2 பேர் கைது
x

கணவரை தாக்கிய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரை,

மதுரை தெப்பக்குளம் தமிழன் தெருவை சேர்ந்தவர் காளிதாசன் (வயது 38). இவருடைய மனைவி சிவசக்தி (30). இவருக்கும். விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த சோலைமலைகண்ணன் (29) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் காளிதாசன் மனைவியை கண்டித்துள்ளார். அதில் ஆத்திரம் அடைந்த சிவசக்தியும், சோலைமலைகண்ணனும் சேர்ந்து காளிதாசனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து அவர் தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகக்தி, சோலைமலைகண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story