வாலிபரை கொலை செய்த வழக்கில் சகோதரரும் கைது


வாலிபரை கொலை செய்த வழக்கில் சகோதரரும் கைது
x

குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை கொலை செய்த வழக்கில் சகோதரரும் கைது செய்யப்பட்டார்.

மதுரை


குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை கொலை செய்த வழக்கில் சகோதரரும் கைது செய்யப்பட்டார்.

குடிபோதையில் தகராறு

மதுரை சொக்கலிங்கநகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 56). இவருடைய மனைவி குருவம்மாள் (50). இவர்கள் அந்த பகுதியில் வடை கடை நடத்தி வருகின்றனர். இவர்களது மூத்த மகன் மயில்ராஜ். இவருக்கு திருமணமாகி விட்டது. மாடி வீட்டில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2-வது மகன் மாரிச்செல்வம் (27). அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டுவீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபடுவாராம்.

இந்தநிலையில் சம்பவத்தன்று, மாரிச்செல்வம் அதிக அளவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, பெற்றோருக்கும், மாரிச்செல்வத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பெற்றோர், வீட்டில் இருந்த கயிற்றை எடுத்து குடிபோதையில் படுத்திருந்த மாரிச்செல்வத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜன், குருவம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும், மாரிசெல்வத்தின் சகோதரர் மயில்ராஜிடமும் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. நீண்ட நேர விசாரணைக்குபின் சகோதரரை கொலை செய்ததை மயில்ராஜ் ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் மயில்ராஜை கைது செய்தனர்.

சொத்துக்காக...

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடும்ப சொத்தை விற்பனை செய்தததில், சம பங்கு வேண்டும் என்று மாரிச்செல்வம் கேட்டு குடும்பத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதன் காரணமாக சகோதரர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று, குடிபோதையில் வீட்டுக்கு வந்த மாரிச்செல்வம், சொத்தில் பங்கு கேட்டு மீண்டும் தகராறு செய்துள்ளார்.

இதனால், ஆத்திரத்தில் வீட்டில் கிடந்த ஸ்கிப்பிங் கயிற்றால், மாரிச்செல்வத்தின் கழுத்தை இறுக்கி அவர்கள் 3 பேரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பெற்றோருடன் சேர்ந்து, மயில்ராஜையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.


Related Tags :
Next Story