நல்லம்பள்ளி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது


நல்லம்பள்ளி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

நல்லம்பள்ளி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே மிட்டாநூலஹள்ளி வட்டாளிகொட்டாய் பகுதியில் கஞ்சா விற்பதாக அதியமான் கோட்டை போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட கிராமத்தில் சந்தேகத்திற்கிடமாக சாலையோரம் நின்றிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் இருவரும் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வட்டாளிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த சென்ராயன் (வயது 53), கன்னியப்பன் (55) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story