தேன்கனிக்கோட்டையில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது கார் பறிமுதல்


தேன்கனிக்கோட்டையில்  ரேஷன் அரிசி கடத்தியவர் கைது  கார் பறிமுதல்
x

தேன்கனிக்கோட்டையில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது கார் பறிமுதல்

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மேல் கோட்டை பகுதியில் வசித்து வருபவர் முபாரக். இவருடைய மகன் சையுபுல்லா (வயது 22). இவருடைய வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அவரின் வீட்டின் திடீரென சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி மற்றும் அரிசி கடத்த பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சையுபுல்லாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story