மேட்டூரில் அரிவாளுடன் வலம் வந்தவர் கைது


மேட்டூரில் அரிவாளுடன் வலம் வந்தவர் கைது
x

மேட்டூரில் அரிவாளுடன் வலம் வந்தவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

மேட்டூர்:

மேட்டூரை அடுத்த கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவருடைய மகன் சிபி (வயது 25). இவர் மீது கொலை வழக்கு உள்ளதாக தெரிகிறது. இவர், கருமலைக்கூடல் பகுதியில் அரிவாளுடன் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த கருமலைக்கூடல் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிபியை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.


Next Story