கம்பைநல்லூர் அருகே மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது


கம்பைநல்லூர் அருகே மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

கம்பைநல்லூர் அருகே

மதுபாட்டில்கள் விற்ற பெண் கைதுமொரப்பூர்:

கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்ந்தில்குமார் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கம்பைநல்லூர் அருகே உள்ள பள்ளப்பட்டியில் மதுபாட்டில்களை பதுக்கு வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை செய்ததில், தண்டபாணி என்பவரது மனைவி சுமதி (வயது 35) மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story