மது விற்ற 2 பேர் கைது

காரிமங்கலம்:
காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதமிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் மொரப்பூர் சாலை, தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலை, அகரம் பிரிவு சாலை, சந்தை பகுதி உள்ளிட்ட இடங்களில் நேற்று வாகன சோதனை நடத்தினர்.
அப்போது சட்டவிரோத மது விற்பனை செய்ததாக காரிமங்கலம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 48) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் லண்டன்பேட்டை பகுதியை சேர்ந்த சலீம் (38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





