திருட்டு வழக்கில் 32 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

தர்மபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டியை சேர்ந்தவர் அப்ராஜ் (வயது 53). தர்மபுரியில் ஒரு வீட்டில் நடந்த திருட்டு தொடர்பான வழக்கில் இவரை தர்மபுரி டவுன் போலீசார் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர். அதன் பின் ஜாமீனில் வெளியே வந்த அப்ராஜ் தலைமறைவானார். இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் சேலம் லைன் மேடு பகுதியில் அவர் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து செல்போன் சிக்னல் மூலம் அந்த பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்ட தர்மபுரி டவுன் போலீசார் அப்ராஜை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





