அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது

அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது டிராக்டர் பறிமுதல்
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஆதிச்சபேரியில் மணல் கடத்தல் நடப்பதாக களக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் ஆதிச்சபேரிக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பாலையா (வயது 45) என்பவர் அனுமதி இன்றி ஓடை மணலை டிராக்டர் மூலம் அள்ளிக்கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயற்சி செய்தார். எனினும் போலீசார் அவரை கைது செய்தனர். மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





