பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
காரிமங்கலம்:
காரிமங்கலம் அடுத்த ஆர்.எஸ்.வி. முருக்கம்பட்டியில் பணம் வைத்து சூதாடுவதாக காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தோப்பில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, பென்னாகரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சபா (வயது 64), பழனிமுத்து (50), பசுபதி (61), மகேந்திரன் (59), ஜீவானந்தம் (37), வஜர் (40), மூர்த்தி (28) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.28,800 பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





