வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது


வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது
x
தினத்தந்தி 17 May 2023 10:05 PM IST (Updated: 18 May 2023 12:50 PM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள திப்பட்டிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணாமணி (வயது 59). விவசாயி. இவர் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து பாப்பாரப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவுத்ரி வெங்கடேஷ் தலைமையில் போலீசார், திப்பட்டிப்பள்ளம் கிராமத்திற்கு சென்று கண்ணாமணி வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவர் வீட்டில் சாராயம் காய்ச்சி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் வைத்திருந்த 5 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story