இண்டூர் அருகே மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

பாப்பாரப்பட்டி
இண்டூர் அருகே உள்ள திப்பட்டிபள்ளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அபபோது பாப்பாரப்பட்டியில் இருந்து ராஜா கொல்லஅள்ளியை நோக்கி ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து போலீசார் ஸ்கூட்டரில் சோதனை செய்தபோது மதுபாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ராஜாகொல்லஅள்ளியை சேர்ந்த முருகன் (வயது 49) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்கள், ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





