கைதான கல்லூரி மாணவர் தப்பி ஓட முயன்றதால் பரபரப்பு


கைதான கல்லூரி மாணவர் தப்பி ஓட முயன்றதால் பரபரப்பு
x

கைதான கல்லூரி மாணவர் தப்பி ஓட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

வீட்டில் திருட முயற்சி

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பாப்பாகாலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்தார். இதைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். உடனே அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்த வீட்டில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அங்கு சென்று அந்த வீட்டின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வீட்டின் சுவர் ஏறி குதித்து திருட முயன்றவர், அதேபகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் திருமலை (வயது 23) என்பதும், அந்த வீட்டில் கார் பேட்டரியை திருட முயன்றதும் தெரியவந்தது.

தப்பி ஓட்டம்

இதையடுத்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அமர்ந்து இருந்த அவர் திடீரென தப்பி ஓட்டம் பிடித்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை விரட்டி சென்று மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே மடக்கி பிடித்தனர். இந்த சம்பவம் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று பகல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story