பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர் கைது

அரக்கோணம் அருகே பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணம் அருகே அசமந்தூர் பகுதியில் கடந்த மாதம் பொது சொத்துக்களை அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 40) என்பவர் சேதப்படுத்திவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜா தக்கோலம் அடுத்த முருங்கை அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த ராஜாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





