மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு; வாலிபர் கைது

சிவகிரியில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிவகிரி:
சிவகிரி குமாரபுரம் மேலப்பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கோமதி நாயகம் (வயது 27). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் சுரேஷ்குமார் (28) என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கோமதிநாயகம் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை சுரேஷ்குமார் தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோமதிநாயகம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





