மாணவ-மாணவிகளுக்கான கலை போட்டிகள்


மாணவ-மாணவிகளுக்கான கலை போட்டிகள்
x

மாணவ-மாணவிகளுக்கான கலை போட்டிகள் நாளை நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட அளவில் 5 முதல் 8 வயது வரை, 9 முதல் 12 வயது வரை, 13 முதல் 16 வயது வரை ஆகிய வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவர்களுக்கான கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பரத நாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை), குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலை போட்டிகள் நாளை (சனிக்கிழமை) பெரம்பலூர் மதனகோபாலபுரம் 4-வது தெருவில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5-8, 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது வயது சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்பு சான்றிதழ்களுடன் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு நாளை காலை 9 மணிக்கு வருகை தர வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்களில் 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வார விடுமுறை நாட்களான சனிக்கிழமையில் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமையில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 11 மணி வரையிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே சிலம்பம் போன்ற கலை பயிற்சிகள் பெரம்பலூரில், மாவட்ட அரசு இசை பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் சிறுவர்-சிறுமிகள் சேர்ந்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Next Story