வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள்


வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள்
x

அரசு பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கடந்த 19-ந்தேதியும், 9, 10-ம் வகுப்புகளுக்கு நேற்று முன்தினமும் வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அரசு பள்ளி அளவில் 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டார அளவில் போட்டிகள், அந்தந்த வட்டாரங்களில் நேற்று நடைபெற்றன. அவர்களுக்கு காண்கலை, நுண்கலையில் ஓவியம் வரைதல், இசை, கருவியிசை, நடனம், நாடகம், மொழித்திறன் உள்ளிட்ட 9 விதமான கலை போட்டிகள் நடைபெற்றன.

இந்த கலை திருவிழா போட்டிகளில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வட்டார அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மாவட்ட அளவிலும், அதில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கப்பட உள்ளது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மைப்பெறும் மாணவ-மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர்.


Next Story