பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலைத்திருவிழா


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலைத்திருவிழா
x
தினத்தந்தி 20 Dec 2022 6:45 PM GMT (Updated: 20 Dec 2022 6:45 PM GMT)

செங்கோட்டையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலைத்திருவிழா நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை வட்டார வளமையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செங்கோட்டையில் கலைத்திருவிழா நடந்தது. விழாவை நகராட்சி தலைவர் ராமலட்சுமி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ வரவேற்று பேசினார். செங்கோட்டை வட்டார நன்நூலகர் ராமசாமி மற்றும் அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் பலர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் அய்யப்பன், டேவிட் ஞானராஜ், சிவராமன், சுப்பிரமணியன், செந்தூர் பாண்டியன், கற்பகவல்லி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். ஏற்பாடுகளை செங்கோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி, ஆசிரியர் பயிற்றுனர்கள் சுகந்தி, முத்துசரோஜினி மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்து இருந்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி நன்றி கூறினார்.


Next Story