வாலிபர் மீது தாக்குதல்; 3 பேர் கைது


வாலிபர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
x

அம்பை அருகே வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை அருகே உள்ள கோவில்குளம் மேல காலனியை சேர்ந்தவர் பிச்சையா மகன் சுப்பிரமணியன் என்ற ராஜா (வயது 30). இவரும், அவரது நண்பரும் அம்பையில் இருந்து கோவில்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த 3 பேர் இரு மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். அப்போது முந்தி செல்வதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுப்பிரமணியன் தாக்கப்பட்டு காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில்குளத்தை சேர்ந்த செல்லப்பா மகன் மனோஜ், ஆறுமுககுட்டி மகன்கள் வேலு என்ற கார்த்திக், இசக்கிராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Next Story