ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்


ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21). ஆட்டோ டிரைவர். தேவதானப்பட்டியை சேர்ந்தவர் வினோத். இவர்கள் இருவருக்கும் இடையே ஆட்டோவில் ஆட்களை ஏற்றுவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷ்குமார் தேவதானப்பட்டி-வைகை அணை பிரிவில் நின்று கொண்டிருந்தார். அப்போது வினோத், அவரது நண்பர்கள் டோனி, சூர்யா உள்பட 7 பேர் அங்கு வந்தனர்.

அவர்கள் சதீஷ்குமாரிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். அப்போது அதை தடுக்க வந்த அவரது உறவினரான பிரதாப்பையும் தாக்கினர். இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வினோத், டோனி, சூர்யா உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story