தம்பதி மீது தாக்குதல்; 2 பேர் கைது


தம்பதி மீது தாக்குதல்; 2 பேர் கைது
x

நெல்லை அருகே தம்பதியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த கருங்காடு மேல முப்புடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 50). இவருக்கும், அதே ஊா் மேல தெருவைச் சேர்ந்த மாடகண்ணு மகன் சுப்பிரமணி (43), பொன்னையா மகன் சங்கரசுப்பிரமணி (36) ஆகியோருக்கும் இடையே துக்க வீட்டில் நடந்த மோதல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று மாடசாமி தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணி, சங்கர சுப்பிரமணி ஆகிய இருவரும் சேர்ந்து மாடசாமியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அவருடைய மனைவி மீனா (45), மகள் இசக்கியம்மாள் (13) ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இதில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு முற்றவே அருகில் கிடந்த கட்டையால் தாக்கியதில் மாடசாமி, மீனா மற்றும் இசக்கியம்மாள் காயம் அடைந்தனர். 3 பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து மாடசாமி சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி, சங்கர சுப்பிரமணி ஆகிய இருவரையும் கைது செய்தார்.


Next Story