இளம்பெண் மீது தாக்குதல்

முன்விரோதத்தில் இளம்பெண்ணை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள முத்துலிங்கபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் குமார். அவருடைய மனைவி மனோரதி (வயது 26). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று அங்குள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த மனோரதியை கார்த்திக், அவரது உறவினர்கள் அரவிந்தன், கரந்தமலை, அனிதா ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் மனோரதி புகார் செய்தார். அதன்பேரில் 4 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





