பெண் மீது தாக்குதல்


பெண் மீது தாக்குதல்
x

பெண் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் தேடி வருகிறார்கள்

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர், சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது 38). சம்பவத்தன்று இவர் அதே ஊரைச் சேர்ந்த திரவியம் மகன் கண்ணன் என்ற காடுவெட்டி கண்ணன் வீட்டின் வழியாக சென்றார். அப்போது கண்ணன் வீட்டு வளர்ப்பு நாய், ராமலட்சுமியை கடிக்க பாய்ந்து வந்தது. இதனால் பதறிய ராமலட்சுமி அங்கிருந்து ஒடி சென்று, நாயிடம் இருந்து தப்பினார். பின்னர் அவர் இதுபற்றி கண்ணனிடம் கூறி நாயை கட்டி போட்டு வளர்க்கும் படி தெரிவித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன், அவரை தாக்கினார். மேலும் அவதூறாக பேசி மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கண்ணனை தேடி வருகிறார்.


Next Story