தொழிலாளி மீது தாக்குதல்


தொழிலாளி மீது தாக்குதல்
x

தொழிலாளியை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே உள்ள ஆ.திருமலாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 41). கூலித்தொழிலாளியான இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் பெருமாள். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு முள்வேலி அமைப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தெரு நல்லியில் தண்ணீர் பிடிப்பதற்காக வெற்றிவேல் குடத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெருமாள் தெருவில் நடந்து வந்த வெற்றிவேலை வழிமறித்து அவதூறாக பேசி கீேழ கிடந்த கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த வெற்றிவேல் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story