தொழிலாளி மீது தாக்குதல்; 2 பேர் கைது


தொழிலாளி மீது தாக்குதல்; 2 பேர் கைது
x

செங்கோட்டை அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே புளியரை செட்டியார் தெருவை சேர்ந்த வேல்சாமி மகன் சண்முக குமார் (வயது 43). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியில் இருக்கும் சுடலை மாடன் கோவிலில் நடந்த பூஜைக்கு சென்றுவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீதான முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராமர் (26) மற்றும் 16 வயது மதிக்கத்தக்க ஒருவரும் சேர்ந்து மண்வெட்டி கணையால் சண்முககுமாரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் குமார் வழக்குப்பதிவு செய்து ராமர் உள்ளிட்ட இருவரையும் கைது செய்தார்.


Next Story