தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேர் கைது


தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி பவுண்டு தொழுத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று சிவகிரி திரவுபதி அம்மன் கோவில் அருகில் நின்று கொண்டு தனது நண்பரான குருசாமியுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவகிரி பவுண்டு தொழுத் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்திக் (25), சிவராமலிங்கபுரம் தெருவைச் சேர்ந்த தங்கம் மகன் செல்வமுருகன் (26), சித்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த குருநாதன் மகன் கணேசன் (27) ஆகிய 3 பேரும் மாரியப்பனிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் குருசாமியின் மொபட்டையும் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர். இதுகுறித்த புகாரின்பேரில், சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

1 More update

Next Story