தொழிலாளி மீது தாக்குதல்


தொழிலாளி மீது தாக்குதல்
x
தினத்தந்தி 5 Jun 2023 6:45 PM GMT (Updated: 6 Jun 2023 10:10 AM GMT)

சாத்தான்குளத்தில் தொழிலாளியை தாக்கிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஆர்.சி. வடக்கு தெருவை சேர்ந்த ஜெகன்நாதன் மகன் ஜோதிமுத்து (வயது 45). தொழிலாளி. இவருக்கும், அவரது மூத்த சகோதரர் சூரியன் என்பவருக்கும் பொதுப்பாதை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதனிடையே சூரியன் இறந்து விட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் பிரச்சினைக்குரிய இடத்தில் மணல் மூடைகளை அடுக்கி ஆக்கிரமிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை ஜோதிமுத்து கண்டித்ததால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் சூரியனின் மகன் பண்டாரம், அவரது மனைவி தேவி, மகன்கள் மகேஷ், சாரதி, கதிர்வேல் ஆகிய 5பேரும் சேர்ந்து ஜோதி முத்துவை தாக்கினராம். இதில் காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் ஏட்டு ஜெயஸ்ரீ வழக்குப்பதிவு செய்து, பண்டாரம், தேவி ஆகியோரை கைது செய்தார். மேலும் 3 பேரை சாத்தான்குளம் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story