தொழிலாளி மீது தாக்குதல்; வாலிபர் கைது


தொழிலாளி மீது தாக்குதல்; வாலிபர் கைது
x

களக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே வீ.கே.நகரைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 70). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஜான் மகன் பிரவின் ஜெயபால் (23). இவர் மது குடித்து விட்டு மதியழகனிடம் தகராறு செய்ததாகவும், இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று மதியழகன் தனது வீட்டின் முன்பு நின்றபோது, அங்கு வந்த ஜெயபால் கல்லால் அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மதியழகன் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனர்.


Next Story