இ-பட்டா வழங்குவது குறித்து உதவி கலெக்டர் ஆய்வு

நாட்டறம்பள்ளி பகுதியில் இ-பட்டா வழங்குவது குறித்து உதவி கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடதெக்குப்பட்டு கிராமத்தில் திருப்பத்தூர் உதவி கலெக்டர் பானுமதி தலைமையில் வருவாய் துறையினர் இ-பட்டா வழங்குவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் புலதணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது நாட்டறம்பள்ளி வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கம் மற்றும் கிராம உதவியாளர் ஆனந்தன் உள்ளிட்ட வருவாய் துறையினர் உடனிருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





