அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்


அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்
x

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு பருத்தி 700 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 112-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 692-க்கும் என மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது. 2 ஆயிரத்து 618 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டன. இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.17.80-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.22.70-க்கும் என மொத்தம் ரூ.33 ஆயிரத்து 833-க்கு ஏலம்போனது. கொப்பரை தேங்காய் 64 மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 17-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 889-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 85-க்கு விற்பனையானது. ஈரோடு, பெருந்துறை, பொள்ளாச்சி, திருப்பூர், கோவை, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் விவசாய விளைபொருட்களை ஏலம் எடுத்து சென்றனர்.


Related Tags :
Next Story