ஆத்தூர் சோமநாதசுவாமி கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்


ஆத்தூர் சோமநாதசுவாமி கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 14 Jun 2023 6:45 PM GMT (Updated: 15 Jun 2023 6:38 AM GMT)

ஆத்தூர் சோமநாதசுவாமி கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூரிலுள்ள சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவானதை முன்னிட்டு கோவிலில் நேற்று காலையில் சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை, சுவாமி அம்பாளுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story