ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி முகாம்


ஈரோட்டில்  கொரோனா தடுப்பூசி முகாம்
x

ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

ஈரோடு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.

இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக போடப்பட்டது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 196 பணியாளர்கள் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டது. முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.


Related Tags :
Next Story