கொடுமுடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

கொடுமுடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
கொடுமுடி
கொடுமுடி அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 25). அதே பகுதியை சேர்ந்த ஜஜினா பீபி (23). 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் அவர்களுடைய காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் பெற்றோர்களையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





