முதுகுளத்தூரில், இரட்டை மாட்டுவண்டி பந்தயம்


முதுகுளத்தூரில், இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
x
தினத்தந்தி 8 Jan 2023 6:45 PM GMT (Updated: 8 Jan 2023 6:45 PM GMT)

முதுகுளத்தூரில், இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் கிழக்குத் தெரு பகுதியில் பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 27 மாட்டு வண்டி பந்தய வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். தமிழ் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டி பந்தய வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் கமுதி தாலுகா இலந்தைகுளம் முனியசாமி மாட்டு வண்டி முதல் பரிசை பெற்றது. மேலும் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப் பணமும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் முதுகுளத்தூர், அபிராமம், கமுதி, சாயல்குடி, கடலாடி, அதை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story