பழனிசெட்டிபட்டி உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்த 50 புகார்களுக்கு தீர்வு


பழனிசெட்டிபட்டி உட்கோட்ட போலீஸ் நிலையங்களில்  நிலுவையில் இருந்த 50 புகார்களுக்கு தீர்வு
x

பழனிசெட்டிபட்டி உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் நிலுவயைில் இருந்த 50 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது

தேனி

பழனிசெட்டிபட்டி உட்கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார்கள் மீதான விசாரணை வீரபாண்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமை தாங்கினார். பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள 60 புகார் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. மனுதாரர்கள் மற்றும் புகார்களில் சம்பந்தப்பட்டவர்கள் என இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் 50 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அசோக், வீரபாண்டி சப்- இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story